மீண்டும் வேகமெடுக்கும் மெட்ராஸ் – ஐ.. கவனத்துடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
மீண்டும் வேகமெடுக்கும் மெட்ராஸ் - ஐ.. கவனத்துடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
மீண்டும் வேகமெடுக்கும் மெட்ராஸ் - ஐ.. கவனத்துடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
மீண்டும் வேகமெடுக்கும் மெட்ராஸ் – ஐ.. கவனத்துடன் இருக்க வேண்டும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ என்று சொல்ல கூடிய கண் நோய் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்நோய்:

தமிழகத்தில் மழை காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதனை தொடர்ந்து மெட்ராஸ் ஐ என்று சொல்ல கூடிய கண் நோய் பாதிப்பும் மக்களுக்கு அதிகம் ஏற்படும். இந்த நோய் ஒருவரிடம் இருந்து எளிதில் மற்றவருக்கு பரவுகிறது. அதனால் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருப்பது நல்லது.

என்னது…இதற்கும் ஆதார் எண் கட்டாயமா? அதிரடி காட்டும் அரசு.. புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

Follow our Instagram for more Latest Updates

மேலும் அவர்கள் தங்கள் கண்களை சுத்தமான துணியால் மூடி கொள்ள வேண்டும். அத்துடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் நோய் பாதிப்பு இன்னும் அதிகரித்து விடும். நடப்பு ஆண்டு சென்னையில் மெட்ராஸ் – ஐ பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமானோர் மெட்ராஸ் – ஐ நோயால் பாதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சென்னையில் மீண்டும் மெட்ராஸ்- ஐ பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தினதோறும் 100 க்கும் மேலானோர் கண் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் மட்டும் நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் கண் நோய் சிகிச்சைக்கு வருவதாகவும் கூறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!