என்னது…இதற்கும் ஆதார் எண் கட்டாயமா? அதிரடி காட்டும் அரசு.. புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!
நாட்டில் தற்போது அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இதற்கு ஆதார் எண் கட்டாயம் என புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆதார் எண்
நாட்டில் அரசின் சேவைகளை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு வருவதால் இதனை தடுப்பதற்கு தற்போது, வங்கி கணக்கிலிருந்து, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு அரசின் ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல்களில் வாக்காளர் பதிவுகளை நேர்மையான முறையில் மேற்கொள்ள வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி 2023 மாத நடப்பு நிகழ்வுகள் – Download January Current Affairs!
Follow our Twitter Page for More Latest News Updates
இதே போல பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளின் நல திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்து சில நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், மானியங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கையை புதுச்சேரி ஆளுநர் அனைத்து துறை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.