1911 குரூப் டி பணியாளர்கள் பணி நீக்கம் – கொல்கத்தா உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு!
மேற்குவங்க மாநிலத்தில் வருகிற 23ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்தியமிக் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட குரூப் டி பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இத்தேர்வை எவ்வித பாதிப்புமின்றி நடத்த வேண்டும் என்று கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
குரூப் டி பணியாளர்கள்
மேற்குவங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு அல்லது மத்தியமிக் தேர்வானது வருகிற 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டு தற்போது பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குரூப் டி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான மதிப்பெண்களின் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு.. தொடர் விலை குறைவால் மகிழ்ச்சியில் மக்கள்!
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, சட்ட விரோதமாக முறையில் ஈடுபட்ட 1911 குரூப் டி பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை மாவட்ட ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குரூப் டி பணியாளர்கள் மத்தியமிக் தேர்வு நடைபெறும் கூடத்தில் வினாத்தாள்களை வழங்குவது மற்றும் இருக்க எண் பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்வார்கள். அதனால் 1911 குரூப் டி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் 400 தேர்வு மையங்கள் பாதிக்கப்படலாம். அதன் காரணமாக இவர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்து, தேர்வு நடைபெறுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.