தமிழகத்தில் LPG சமையல் எரிவாயு விலை குறைப்பு? நிதியமைச்சர் விளக்கம்!
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. மேலும், விலை குறைப்பிற்கான வரி விதிப்பு அதிகாரமும், வருமானமும் தமிழக அரசுக்கு இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை:
அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றான சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சாமானிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அதிகரித்து வரும் சிலிண்டர் விலை சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் 24% ஆக குறைவு – இந்தியா டுடே கருத்து கணிப்பு!
தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் இந்த விலையேற்றத்தை கண்டித்து வருகின்றனர். வெளிநாட்டு சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை உயரும் பட்சத்தில் இந்தியாவிலும் அதன் விலை உயருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிலிண்டருக்கான மானியமும் சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. நேற்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.875.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை அடுத்து அறிவிப்பு மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதில் தொடர்ந்து அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா என்று பாமகவின் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமையல் எரிவாயு விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. மேலும், விலை குறைப்பிற்கான வரி விதிப்பு அதிகாரமும், வருமானமும் தமிழக அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.