தமிழக அரசு பள்ளிகளில் சரியும் மாணவர் வருகைப்பதிவு – தேர்வுகள் காரணமா?
சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில் தினமும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மாணவர் வருகை பதிவு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குற்றச்சாட்டு:
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, 9:30 முதல், மாலை, 3:30 மணி வரை பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் சேலம் மாவட்டத்தில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், தினமும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பரிசுத்தொகை & சான்றிதழ்!
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது, காலை, 8:30 மணிக்கு வகுப்பறைக்குள் வரும் மாணவர்களை, மாலை, 5:30 மணி வரை வெளியே அனுப்புவதில்லை. பல மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம், தினமும் தேர்வு, அதற்கான பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் உள்ளிட்டவை, மாணவ, மாணவியர் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் வருகை கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்த நிலையில், தொடக்கத்தில் ஆர்வமாக வந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது குறைந்து வருகிறது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
வகுப்பறையில் மன உளைச்சல் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், ”மாணவர்கள் வருகையில் சரிவு எதுவும் இல்லை. வேலை செய்ய தயாராக இல்லாத சில ஆசிரியர்கள், இதுபோன்று தகவல் பரப்புகின்றனர் என தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.