தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பரிசுத்தொகை & சான்றிதழ்!
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
பேச்சுப்போட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளில் இளங்கலை இறுதியாண்டு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கின்றது. ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஒற்றை பெண் குழந்தை, SC, ST & முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு!
இந்நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போட்டிகள் மாவட்ட வாரியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்று தனியாக நடத்தப்பட உள்ளது. தலைப்புகள் மாணவர்களுக்கு போட்டி நடைபெறும் நாள் அன்று அறிவிக்கப்படும். ஒவ்வொரு கல்லூரி மற்றும் பள்ளியிலும் கலந்து கொள்ள இருக்கும் 2 மாணவர்களை கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்களே தேர்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now
பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருந்து மாவட்டத்திற்கு இருவரை வெற்றியாளராக தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அக்டோபர் 2ம் தேதி காலை 10 மணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல்போட்டிகள் நடக்கும். இதனால் மாணவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.