ஒற்றை பெண் குழந்தை, SC, ST & முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு!

0
ஒற்றை பெண் குழந்தை, SC, ST & முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை - யுஜிசி அறிவிப்பு!
ஒற்றை பெண் குழந்தை, SC, ST & முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை - யுஜிசி அறிவிப்பு!
ஒற்றை பெண் குழந்தை, SC, ST & முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு!

ஒற்றை பெண் குழந்தை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை:

மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை திட்டமும் ஒன்று. ஒற்றைப் பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் – கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக கூறப்பட்டதாவது, முழு நேர முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான மேற்படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. 30 வயது வரையிலான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் கல்வி உதவித்தொகை மட்டுமே வழங்கப்படும். உணவு, விடுதி கட்டணம் ஆகியவை வழங்கப்படாது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

இந்த உதவித் தொகையின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,200 தொகை வழங்கப்படும். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாதந்தோறும் ரூ.3,100 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கும் 30 வயதே வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் ரூ.7,000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களின் மேற்படிப்புக்காக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் தொலைதூரக் கல்வி மற்றும் தபால் வழி கல்விக்கு உதவித்தொகை கிடையாது. மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி 30.11.2021 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!