நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

0
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாத நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்:

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் பொதுவாக பொதுத்தேர்வுகள் நடக்கும் என்பதால் பள்ளி மாணவர்களின் தேர்வுகளை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 18ம் தேதி உத்தேச நாளாக கொண்டு தேர்வு பணிகளை கவனித்துக் கொள்ளுமாறு கல்வித் துறைக்கு தேர்தல் வாரியம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

EIL பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,80,000/-

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் 68,000 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக 3 லட்சத்து 32 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியான பின்னர் தொகுதிவாரியாக இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!