மாநிலத்தின் 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமல் – பிப்.21 முதல் பள்ளி & கல்லூரிகள் முழுமையாக திறப்பு!
குஜராத் மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 21 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை துவங்க அனுமதி அளித்திருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதை முன்னிட்டு குஜராத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 21 முதல் முழுமையாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் முக்கிய ஆறு நகரங்களில் மட்டும் நேற்று (பிப்.18) முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில கல்வி அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி, ‘குஜராத் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? கல்வித் தகுதி, பாடத்திட்டம் & முழு விவரம் இதோ!
அந்த வகையில் கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பிப்ரவரி 21 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளும், மாணவர்களும் ஆப்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குஜராத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 1 லிருந்து 9 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இந்த நடவடிக்கை தற்போது பிப்ரவரி 21க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிப்.17 முதல் மாநிலத்தில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!
மேலும் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 25 வரை அகமதாபாத் மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தவிர இம்மாநிலத்தில் அனைத்து வகையான அரசியல், சமூக, கல்வி, கலாச்சார, மத நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், ஆடிட்டோரியம், சட்டசபை அரங்குகள் போன்றவை திறந்த வெளியில் 75 சதவீத ஆக்கிரமிப்புடனும், மூடிய இடங்களில் 50 சதவீத ஆக்கிரமிப்புடனும் நடத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம், சிறு வணிகர்கள் மற்றும் வணிகர்களின் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் பிப்.17ம் தேதியன்று 870 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.