நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் ஊரடங்கு அமல் – ஒமைக்ரானால் 3வது அலை! பேராசிரியர் கணிப்பு!
உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3வது அலையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிப்ரவரியில் 3வது அலை:
உலகின் பல்வேறு நாடுகளை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று தற்போது பல அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கர்நாடகா, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 23 பேருக்கு இந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருமலை – திருப்பதி கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு? தேவஸ்தானம் எச்சரிக்கை!
இந்நிலையில் கொரோனா தொற்றை கணித்து சொல்லக்கூடிய நிபுனர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.ஐ.டி பேராசிரியர் மனிந்தர அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓமைக்ரான் தொற்று பரவல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது ஓமைக்ரான் தொற்றால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அந்த 3வது அலையின் தாக்கம் 2வது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போலீசாருக்கு ஆண்டு சீருடைப்படியாக ரூ.10,000 வழங்கப்படும் – அரசு ஒப்புதல்!
தென் ஆப்பிரிக்காவில் தொற்று பரவுவதன் அடிப்படையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் ஓமைக்ரான் தொற்று உச்சத்தில் இருக்கும் போது நாளொன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்து கூறியுள்ளார். டெல்டா வகை கொரோனா பரவிய போது 3வது அலையை ஏற்படுத்தாத வகையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதேபோல் ஓமைக்ரான் தொற்றால் ஏற்பட உள்ள 3வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்தால் ஓமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.