போலீசாருக்கு ஆண்டு சீருடைப்படியாக ரூ.10,000 வழங்கப்படும் – அரசு ஒப்புதல்!
புதுச்சேரியில் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படியாக இனிமேல் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய உத்தரவு காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீருடைப்படி ரூ.10,000:
நாடு முழுவதும் உள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு முதல் காவலர்களுக்கு சீருடைக்கு பதிலாக சீருடைப்படியாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்க முடிவு செய்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில் புதுச்சேரியில் பணிபுரியும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு நடப்பாண்டிற்கான சீருடைப்படி வழங்கப்படும் என்று அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு!
இது குறித்து புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் விளக்கியுள்ளார். அதாவது 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி சீருடை அலவன்ஸ்கள் தொடர்பான தற்போதைய உத்தரவுகளை ரத்து செய்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி காவலர்களுக்கு சீருடைக்கு பதிலாக சீருடைப்படி வழங்க அதாவது சீருடை பராமரிப்பு, ஷூ, சீருடை சலவை உள்ளடக்கிய செலவுகளுக்கு ஒரே சீருடைப் படியாக வழங்கும் விதமாக குடியரசுத் தலைவர் நிர்ணயம் செய்துள்ளார்.
தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!
இந்த முறை அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் சீருடைப்படி வழங்காத காரணத்தால் காவலர்கள் அவர்களது சொந்த செலவில் இதுவரை சீருடை வாங்கியுள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி காவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரும் 2022 – 23 ஆம் ஆண்டு ஜூலை மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கடந்த 4 ஆண்டுகளாக சீருடைப்படி வழங்காதது வருத்தத்தை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனால் விரைவில் நிலுவையில் உள்ள சீருடை படியை வழங்குமாறு காவலர்கள் கோரி வருகின்றனர்.