கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

0
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கில் தளர்வுகள் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்:

இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த COVID-19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 4,28,94,345 ஆக உள்ளது, அதே நேரத்தில் தற்போது மொத்தம் 1,34,235 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 1.28 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 1.48 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறித்து வருவதை கருத்தில் கொண்டு, சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மத நிகழ்வுகள் மற்றும் இரவு ஊரடங்கு நேரங்கள் ஆகியவற்றிற்கான கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – முன்கூட்டியே செலுத்தினால் வட்டி விகிதம்!

மார்ச் மாதத்திற்கான கோவிட்-19 வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்தபடி, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி, கொரோனா தொடர்பான உள்ளூர் சூழ்நிலையை கவனமாக ஆய்வு செய்த பிறகு, சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மதம், திருவிழா தொடர்பான கூட்டங்கள், இரவு ஊரடங்கு; பொது போக்குவரத்து செயல்பாடுகள், வணிக வளாகங்கள், சினிமா போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தளர்வு பரிசீலிக்கப்படலாம்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

அரங்குகள், ஜிம்கள், ஸ்பாக்கள், உணவகங்கள் மற்றும் பார்கள்; பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகள் திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட வழிகாட்டுதல்களில், கோவிட் மேலாண்மைக்கான தேசிய உத்தரவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள படி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பராமரித்தல், ஆகியவற்றைத் தொடர வேண்டும் என்று உள்துறைச் செயலாளர் வலியுறுத்தினார். கோவிட்-19 தொற்றின் சோதனை மற்றும் கண்காணிப்பு, மருத்துவ மேலாண்மை, தடுப்பூசி மற்றும் கோவிட் பொருத்தமான நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!