நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? மத்திய அரசுக்கு அழுத்தம்!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போல மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உச்சநீதிமன்றம் என பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
TN Job “FB Group” Join Now
கொரோனா ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 414,188 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3,915 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 234,083 ஆக உயர்ந்துள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கை கடந்த 10 நாட்களாக 3,000க்கும் அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
உயர்மட்ட தலைவர்கள் மற்றும் நோய் பரவல் அதிகமுள்ள மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்திய மோடி, மாநில அரசுகள் கொரோனா நிலவரத்தை பொருத்து கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அரசாங்க சுகாதார நிபுணர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கடந்த ஆண்டைப் போலவே இந்தியாவில் ஒரு முழுமையான ஊரடங்கு தேவைப்படுகிறது. குறிப்பாக பரிசோதிக்கப்பட்டவர்களில் 10% க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நான்கு மணி நேர அறிவிப்பில் பிரதமர் மோடி இரண்டு மாத கடுமையான ஊரடங்கை அறிவித்தார். இது பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலையில்லாமல் தங்களது சொந்த ஊர் நோக்கி புறப்பட வழிவகுத்தது. இந்த முடிவு வைரஸைக் கட்டுப்படுத்த உதவியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 23% குறைந்தது. ஏப்ரல் முதல் 2021-22 நிதியாண்டில் 12.5% வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இருப்பினும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கை மத்திய அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.