நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு திட்டம்!
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
மீண்டும் முழு ஊரடங்கு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் ஆட்சி செய்து வருகிறது. பல வளர்ந்த நாட்கள் கூட கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,619க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TCS நிறுவனத்தில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனால் ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகள் நிரம்பிக் கொண்டே இருக்கிறது. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹாங்காங் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து ஹாங்காங் தலைவர் கேரி லாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
அதில், தற்போதைக்கு ஹாங்காங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை. கொரோனா தொற்றிடம் சரண் அடைய முடியாது. முழு ஊரடங்கு என்பது தீர்வல்ல. கொரோனா வைரஸ் தொற்றின் அலை தீவிரம் அடையும் பட்சத்தில், ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல் குறித்து மறு ஆய்வு செய்யப்படும். தற்போதைய நேரத்தில் அது குறித்து பதில் அளிக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார்.