மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல் உத்தரவு – மணிப்பூரில் தொடரும் பதற்ற நிலை!!
மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினரின் ஆயுதக்கிடங்கை மர்மகும்பல் முற்றுகையிட்ட விவகாரத்தில் தற்போது மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் இரண்டு பிரிவினருக்கு இடையே இட ஒதுக்கீடு குறித்த பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு படையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு பின்னர் அமைதி நிலை திரும்பியது. இந்நிலையில் இம்பால் மாவட்டத்தில் கவர்னர் மாளிகை மற்றும் முதல்வர் அலுவலகம் அருகில் உள்ள பாதுகாப்பு படையினரின் ஆயுத கிடங்கை நேற்று முன்தினம் 2000 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் வாகனங்களில் முற்றுகையிட தொடங்கினர்.
தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளையும் மூட நடவடிக்கை – வலுக்கும் கோரிக்கை!!
காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பதற்ற நிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.