மாநில அரசு ஓய்வூதியதரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி ஆன்லைனில் உயிர்வாழ் சான்றிதழ்!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் அரசு பணியில் பணிபுரிந்து பென்ஷன் பணம் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு இ.பி.எப்.ஓ. வாயிலாக பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு பென்ஷன் பணம் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் பணத்தை ஓய்வூதியதாரர்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் துறை மூலமாக பெற்று வருகின்றனர். இந்த பென்ஷன் பணத்தை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ் வங்கிகள் மூலமாக வழங்கப்படும். இதனை கட்டாயமான முறையில் ஓய்வூதியதாரர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இதனை நேரில் சென்று பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கருத்து பெறப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தினசரி 12 மணிநேரம் வேலை அமல்? அரசு விளக்கம்!
இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனால் உயிர்வாழ் சான்றிதழை வங்கிக்கு நேரில் சென்று பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று ஓய்வூதியதாரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, டெல்லியில் பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் – புதிய அனுமதிகள் வழங்கல்!
அத்துடன் இதனை வங்கிகளுக்கு சென்று அலைந்து வாங்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால் ஓய்வூதியதாரர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இதனை தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளதால் இதில் பென்ஷன் தொகை உயர்வு குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.