மத்திய அரசு ஊழியர்களுக்கு தினசரி 12 மணிநேரம் வேலை அமல்? அரசு விளக்கம்!
இந்தியாவில் மத்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
நேரம் அதிகரிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவிய பெருந்தொற்று காலத்திலும் அரசு ஊழியர்கள் இடைவிடாது தங்களது பணிகளை செய்து வந்தனர் இதனால் ஏராளமான வயது முதிர்ந்த ஊழியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி சிரமப்பட்டனர் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் நலன் கருதி 14 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு வழங்கியது.
தமிழகத்தில் பிப்.16 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் – புதிய அனுமதிகள் வழங்கல்!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு, மேலும் 3% அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஹோலி பண்டிகைக்கு பிறகு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் உயர்த்தபட போவதாக கூறப்படுகிறது. தற்போது தினமும் 8 மணி வாரத்தில் 6 நாட்கள் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
Post Office இல் ரூ.150 தினமும் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதில் உள்ள புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி ஆக உயர்த்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்ற கேள்விக்கு எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் இதுபோன்ற திட்டம் என்று கூறியுள்ளார்.