மதுபானங்கள் விலையை உயர்த்த மாநில அரசு திட்டம் – நவ.1 முதல் அமல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவ.1ம் தேதி முதல் 5% மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மதுபானங்களின் விலை:
தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது, மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்க செய்யும் வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது
பெண்ணை கொடுமைப்படுத்தினால் லிவிங் டுகெதர் உறவில் தண்டனை கிடையாது – நீதிமன்றம் திடீர் உத்தரவு!!
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, பார்கள், லவுஞ்ச்கள் மற்றும் கிளப்புகளில் வழங்கப்படும் மதுபானங்கள் விலையை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, பெர்மிட் ரூம் மதுபான சேவைக்கான VAT வரி 5% அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
ஆனால், ஆன்-கவுன்டர் விற்பனையின் விலையில் எந்த வித மாற்றமும் இருக்காது என அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு நவ.1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.