LIC-ன் புதிய ஜீவன் சாந்தி திட்டம் – மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதியம்.. விவரம் இதோ!
LIC-ன் புதிய ஜீவன் சாந்தி திட்டம் மூலம் மாதம் 1 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதியத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் விலை வரம்பு கிடையாது. சிறந்த ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு புதிய ஜீவன் சாந்தி திட்டம் நல்ல தேர்வாக அமையும்.
புதிய ஜீவன் சாந்தி திட்டம்:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீடு திட்டமான LIC மக்களுக்கு பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று புதிய ஜீவன் சாந்தி திட்டம். இது நிரந்தர வருமானம் அளிக்கும் சிறந்த திட்டமாகும். குறைந்தபட்சம் 30 வயதிற்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச பாலிசியின் விலை ரூ.1,50,000 ஆகும்.
இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்… கட்டாயம் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க – விவரம் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
அதிகபட்ச கொள்முதல் விலை உச்ச வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானது நடப்பு ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. மேலும் இதில் பிரிவு 80 C – ன் படி வரி சலுகையும் அளிக்கப்படும். இந்த எல்.ஐ.சி-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் வரும் வருடாந்திர வருமான தொகையை அதிகாரபூர்வ வலைதளத்தில் உள்ள கால்குலேட்டர் மற்றும் எல்.ஐ.சி. செயலிகளின் மூலம் எளிதாக கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதந்தோறும் பாலிசி செலுத்த கூடிய வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் பிரீமியம் ரூ.10516528 பாலிசி தொகைக்கு 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத் தொகையுடன் மாதம் ரூ.1.08 லட்சத்தை பாலிசிதாரர் மாதாந்திர ஓய்வூதியமாக பெறலாம்.