ஷாக் நியூஸ்.. முக்கால்வாசி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முன்னணி நிறுவனம் – இதுதான் காரணம்!
உலகின் முன்னணி தனியார் நிறுவனமாக இயங்கும் FrontRow எனப்படும் Ed-Tech நிறுவனமானது அதன் 75% ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணி நீக்கம்:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வுகான் மாகாணத்தில் இருந்து கொரோனா தாக்கம் நாடு முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டதன் காரணமாக நோய்த்தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தது. அதன் காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி Ed-Tech நிறுவனமான BYJU’S ஆனது 2500 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனை தொடர்நது FrontRow என்னும் தனியார் Ed-Tech நிறுவனமானது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாவ்.. தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன மாநில போக்குவரத்து கழகம் – மக்கள் நிம்மதி பெருமூச்சு!
Exams Daily Mobile App Download
போதுமான அளவு முதலீடு இல்லாத காரணத்தினால் கடந்த மே மாதம் 30% பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை தொடர்ந்து தற்போது 70% ஊழியர்களை (130 பேர்)பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Ed-Tech நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் சரிவை அடைந்த காரணத்தால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 40 ஊழியர்களுடன் FrontRow நிறுவனம் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்