‘பாரதி கண்ணம்மா’ பரினா & அஞ்சலிக்கு பிறந்த ஆண் குழந்தை – கலாய்க்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த வெண்பாவிற்கும் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் இருவர் ஒற்றுமையை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்க பல திருப்பங்களை வெளிக்கொண்டு வருகின்றனர். பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிபதி உத்தரவிட அதை தெரிந்து கொண்ட வெண்பா மாயாண்டியிடம் அஞ்சலியை கடத்த சொல்கிறார். அஞ்சலி கடத்தப்பட்டதும் அவருக்கு பிரசவ வலி வருகிறது. மறுபக்கம் அஞ்சலியை காணாமல் அகில் எல்லா இடங்களிலும் தேட கண்ணம்மாவிடம் உண்மையை சொல்கிறார். பின் அவரும் சேர்ந்து தேட ஸ்மார்ட் வாட்ச் மூலமாக அஞ்சலி இருக்கும் இடம் தெரிகிறது.
கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் சௌந்தர்யா, பாரதியின் முடிவு என்ன? வெளியான ப்ரோமோ!
பின் அகிலை ரௌடிகள் அடிக்க அஞ்சலிக்கு கண்ணம்மா மற்றும் வைத்தியர் அம்மா பிரசவம் பார்க்கின்றனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அகில் மற்றும் அஞ்சலி மயக்கத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனாவிற்கும் ஆண் குழந்தை நிஜத்தில் பிறந்துள்ளது. இருவரும் நட்பாக பழகி வரும் நிலையில் இருவருக்கும் ரீல் மற்றும் ரியலில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ரசிகர்கள் நல்ல நண்பர்கள் என கலாய்த்து மீம்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
தனது பெயரை மாற்றிய ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா – இவ்வளவு காதலா? வியக்கும் ரசிகர்கள்!
அதை பார்த்த பரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை பகிர்ந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணியை டேக் செய்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் வெண்பாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெண்பா கதாபாத்திரத்தில் பரீனா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்குவார் என தற்போது உறுதியாகி உள்ளது.