கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் சௌந்தர்யா, பாரதியின் முடிவு என்ன? வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கோர்ட் உத்தரவின் படி கண்ணம்மாவை வீட்டுக்கு வர சொல்லி சௌந்தர்யா அழைக்கிறார். ஆனால் பாரதியின் முடிவை எதிர்பார்ப்பதாக கண்ணம்மா கூறுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என பாரதியின் விவாகரத்து வழக்குக்கு கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை தொடர்ந்து பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ கதையில் திடீர் திருப்பமாக அஞ்சலியின் பிரசவம் நடந்திருக்கிறது.
ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘பிக்பாஸ்’ டைட்டில் வின்னர் ஆரவ் – ரசிகர்கள் வாழ்த்து!
இப்போது அனைத்து சூழ்நிலைகளும் சுமூகமாக மாறி வரும் சூழலில் கண்ணம்மாவை, பாரதியுடன் சேர்த்து வைக்க திட்டமிடுகிறார் சௌந்தர்யா. அந்த வகையில் கண்ணம்மாவுக்கு போன் செய்யும் சௌந்தர்யா, எப்போது வீட்டுக்கு வர போகிறாய் என கேட்கிறார். ஆனால் நான் எப்படி இதற்கு பதில் சொல்வது, இந்த கேள்விக்கு உங்கள் மகன் தான் பதில் சொல்ல வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். இப்போது பாரதியை அழைத்து, கோர்ட் சொன்னதை பற்றி உன்னுடைய முடிவு என சௌந்தர்யா கேட்கிறார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” ஹேமா யார் தெரியுமா? அசர வைக்கும் சினிமா பயணம்! ரசிகர்கள் ஷாக்!
ஆனால் சௌந்தர்யாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பாரதி யோசிப்பது போல ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்திற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. என்னதான் பாரதி வெவ்வேறு விதவிதமாக யோசித்தாலும், இனி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வதை தவிர பாரதிக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க இந்த ஜோடியை ஒன்றாக பார்க்கலாம் என தெரிகிறது.