ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘பிக்பாஸ்’ டைட்டில் வின்னர் ஆரவ் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நடிகர் ஆரவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஆரவ்
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ஒரு முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் அது ‘பிக்பாஸ்’ தான். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது அது கலாச்சார சீரழிவு, அவசியமில்லாதது என பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” ஹேமா யார் தெரியுமா? அசர வைக்கும் சினிமா பயணம்! ரசிகர்கள் ஷாக்!
இதன் மூலம் தான் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தற்போது 5வது சீசனை எட்டி இருக்கிறது. இருந்தாலும் இதுவரை 4 சீசன்களை கடந்திருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், இதன் முதல் சீசன் 1 தான் பெரும்பாலான மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. தவிர இந்த சீசன் மட்டும் தான் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது. இப்படி இருக்க ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு ரசிகர்களை சம்பாதித்து, இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டவர் பிரபல மாடல் ஆரவ்.
தனது பெயரை மாற்றிய ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா – இவ்வளவு காதலா? வியக்கும் ரசிகர்கள்!
அந்த வகையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ஆரவ் தனது நீண்ட நாள் காதலியும், மாடலுமான ராஹே என்பவரை மணமுடித்தார். இவர்களது திருமணம் நடைபெற்று சில ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஆரவ். இந்நிலையில் இன்று நடிகர் ஆரவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். இந்த தகவலை அறிந்ததும் அப்பாவான நடிகர் ஆரவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.