7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்திய தகவல்!
மத்திய அரசு பணியாளர்களான நவோதயா பள்ளி ஊழியர்களின் மருத்துவ செலவின தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மூன்று தவணைக்கான அகவிலைப்படி உயர்வு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஜூன் 26 அன்று, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் தேசிய கவுன்சில் (டிஓபிடி) மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய ஊழியர்களுக்கு டிஏ நிலுவை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டி.ஆர். நிலுவை தொகை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
இதனுடன், நவோதயா வித்யாலயா பள்ளியின் (என்விஎஸ்) மத்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்விஎஸ் பள்ளி ஊழியர்களுக்கு இதுவரை மருத்துவ செலவினங்களுக்கான திருப்பி செலுத்தும் தொகை ரூ.5,000 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் அல்லது மத்திய அரசுக்கு சொந்தமான எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும்போது இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும், அவர்களின் முழு குடும்பமும் இந்த திட்டத்தின் மூலம் பலனடைந்து கொள்ளலாம். ஆனால், அவர்களின் பெயர் சிஜிஹெச்எஸ் அட்டையில் இருக்க வேண்டும். இது தொடர்பாக முன்னர் இருந்த நிபந்தனைகள் அப்படியே இருக்கும். மேலும், பயண கொடுப்பனவு சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை 60 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு மத்திய அரசு நீடித்துள்ளது. ஓய்வூதியத்தில் பயணப் படிக்கான (டிஏ) சமர்ப்பிப்பு கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஜூன் 15, 2021 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Too much wrong news. This is coming past 11/2 year onwards
Losu DA news illa da