ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

0
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி - மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி - மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?
ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலி – மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

மகாராஷ்டிராவின் கோவிட் பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி அவர்கள், மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மீண்டும் ஊரடங்கு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று, தானே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஒருவருக்கு ஓமிக்ரான் மாறுபாடு அடைந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டோம்பிவிலி நகரைச் சேர்ந்த இவர், நவம்பர் 23ம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்து, மும்பைக்கு விமானத்தில் சென்றுள்ளார். இதனால் செய்தி அறிக்கையின்படி டிசம்பர் 1 முதல் மும்பை, புனே மற்றும் நாக்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பிற பயணிகளை மாநில சுகாதார அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து மற்றும் கண்காணித்து வருகின்றனர்.

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் – ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

மேலும், நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு இந்திய பெண் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உட்பட ஏழு பேர் புனேவில் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தொற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலையும் நிலையாக இருப்பதாகவும், தற்போது பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள ஜிஜாமாதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

TNPSC குரூப் 4 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு வெளியீடு!

இதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும், இயல்பு நிலை பாதிக்கப்படும் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாநில கோவிட் பணிக்குழு உறுப்பினர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் கோவிட் பணிக்குழு உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி அவர்களிடம் செய்தியாளர்கள் அதிகமாக தொற்று பரவும் அபாயத்தை எவ்வாறு அரசு சமாளிக்க இருக்கிறது கேள்விக்கு, பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு தீவிர தடைகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!