தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கோபி.. இப்போ 1 வேளை சாப்பாட்டிற்கே இந்த கதியா?
பாக்கியலட்சுமி சீரியலில் வகை வகையாக பாக்கியா கொடுக்கும் சாப்பாட்டை குறை சொல்லி வந்த கோபி தற்போது உப்புமா கொடுக்கும் ராதிகாவை எதுவும் சொல்ல முடியாமல் தவித்து வரும் காட்சிகள் பார்க்கும் நமக்கே சிரிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோபி நிலை
பாக்கியலட்சுமி சீரியல் பல ஏற்றத்தாழ்வுகளை கடந்து தற்போது அதிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் இத்தனை நாட்களாக வில்லனாக வந்த கோபி தற்போது காமெடியனாக மாறி உள்ளார். பாக்கியா எதை செய்தாலும் குறை கூறிக் கொண்டே இருக்கும் கோபி தற்போது ராதிகா செய்யும் எதையுமே வாயை திறந்து சொல்ல முடியாத நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
காலையில் காபி முதல் சாப்பாடு வரை அனைத்திற்கும் கோபியின் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பாக்கியா கோபியிடம் வீட்டிற்கு தருவதாக சொன்ன பணத்தின் முதல் செட்டில்மெண்டை அனுப்பியதை கோபியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் இல்லாமல் இருந்தால் கூட இந்த குடும்பம் நன்றாக நடந்து விடும் போல இருக்கிறதே என்று பயப்படுகிறார்.
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு – புதிய கொள்கை அறிமுகம்!
Follow our Instagram for more Latest Updates
இன்னொரு புறம் ராதிகா வீட்டில் கோபிக்கு ஒரு காபி கூட சரியாக கிடைப்பதில்லை. உப்புமாவை கண்ணில் கூட பார்த்திராத கோபி ராதிகா கொடுக்கும் உப்புமாவை வாய் மூடிக்கொண்டு சாப்பிடுகிறார். அதேபோல் லஞ்ச் பாக்ஸில் மயூவுக்கு வைத்த சாண்ட்விச் உங்களுக்கும் வைத்து தரவா? என்று ராதிகா கேட்கிறார். இதனால் கோபி, உனக்கு இந்த சிரமம் எதுமே வேண்டாம். நானே வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன் நீ ரெஸ்ட் எடு என்று சொல்லி சமாளிக்கிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.