10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு – புதிய கொள்கை அறிமுகம்!

0
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு - புதிய கொள்கை அறிமுகம்!
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு - புதிய கொள்கை அறிமுகம்!
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு – புதிய கொள்கை அறிமுகம்!

குஜராத் மாநிலத்தில் தற்போது அரசு மின்னணு கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்த கொள்கையின் மூலம் புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில், குஜராத் அரசு புதிய மின்னணு கொள்கையை உருவாகியுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் மேனுஃபேக்ச்சரிங் (ESDM) துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கல்வி நிறுவனங்கள் இதனை செய்ய கூடாது… இது சட்டப்படி குற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த புதிய கொள்கையின் மூலம், ESDM துறையில் முதலீடு செய்ய உள்ள நிறுவனங்களுக்கு சரக்கு கட்டணத்தில் 5 ஆண்டுகளுக்கு 25% மானியமும், மானியத்தில் கடனுதவியும் அளிக்கப்படும் என்றும், இதை தவிர மற்ற பல சலுகைகளும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன பதிவிற்காக செலுத்தப்பட்ட கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வேலைவாய்ப்பு நல்ல முன்னேற்றத்தை அடைய வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!