தமிழக பள்ளிகளில் முறையாக ஆய்வு – பாதுகாப்பு ஆணைய தலைவர் எச்சரிக்கை!
தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு நிகழ்ந்து வரும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
விடுதிகள் ஆய்வு:
தமிழக கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் அண்மையில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை அடுத்து பள்ளி முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் போது மாணவி பயின்று வந்த தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த விடுதி அரசு அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டது.
WhatsApp-ல் வரவிருக்கும் புதிய அம்சங்கள் – பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தனியார் பள்ளிகள் முழுவதும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனால் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என்று கண்டறிந்தார். இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் முழுவதும் விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படும். மேலும் தவறு செய்யும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போது குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்