அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
தமிழகத்தில் சென்னை நகர வடக்கு கோட்ட அஞ்சலகத்தில் , அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் (10.08.2021) நாள் கடைசி தேதியாகும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் :
தமிழகத்தில் அஞ்சல் துறை பல்வேறு வேலை வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு சில பணிகளுக்கு தேர்வுகள் வைத்து அதனடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் ஆகஸ்ட் 10 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!
மேலும் விண்ணப்பிப்பவர்கள் தங்களின் புகைப்படம், கல்வி சான்றிதழ்கள் மற்றும் உங்களில் சுய விவர குறிப்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். மேலும் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி தேதியாகும். இந்த பணிக்கு சேர விரும்புவர்களின் வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
தேர்தெடுக்கப்படும் ஆயுள் காப்பீடு முகவர்கள், சென்னை நகர வடக்கு கோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர்நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.