ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணிவரையறை ரத்து – பள்ளி கல்வித்துறை உத்தரவு!

0
ஆய்வக உதவியாளர் பதவிக்கான பணிவரையறை ரத்து - பள்ளி கல்வித்துறை உத்தரவு!

சமீபத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கென திட்டமிடப்பட்டு புதிதாக வெளியிடப்பட்ட பணிவரையறையை பள்ளி கல்வித்துறை ஆனது ரத்து செய்துள்ளது.

பணிவரையறை ரத்து:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த தமிழக கல்வித் துறை சார்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற் கட்டமாக பள்ளி ஆய்வகங்களை திறன்பட செயல்படுத்த ஆய்வக உதவியாளரின் பணி செயல் முறைகளில் சில மாறுதல்கள் கொண்டு வரவும், பயிற்சி அளிக்கவும் அரசால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆய்வக உதவியாளர் பதவிக்கான புதிய பணிவரையறை அறிவிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதியன்று வெளியிட்டார்.

இதில் ஆய்வக உதவியாளர்கள் ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணியினை இவர்கள் சரியாக செய்து முடிக்க அப்பள்ளி தலைமை ஆசிரியர் உதவி புரியுமாறும் கட்டளை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல விதிமுறைகளுடன் கொண்டு வரப்பட்ட ஆய்வக உதவியாளர் பதவிக்கான புதிய பணிவரையறையை சில நிர்வாக காரணங்களுக்காக தற்சமயம் ரத்து செய்வதாக பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே படித்து பாஸ் பண்ண – இதை பாலோ பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!