நாளை முதல் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை (ஜூலை 24) முதல் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை தடுக்க அந்த மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த தொடங்கி உள்ளன. மேலும் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சில தளர்வுகள் வாபஸ் வழங்கப்பட்டு வருகின்றன.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு? அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடந்த புதன்கிழமை (ஜூலை 21) அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி நாளை (ஜூலை 24) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 25) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடுமையான முறையில் கடைபிடிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில் இன்று முதல் ஒரே நாளில் 3 லட்சம் பரிசோதனைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.