ஜூலை 18, 19 & 20 ஆகிய தேதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – கேரள அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி கேரள மாநிலத்தில் வருகிற ஜூலை 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தன. அந்தந்த மாநிலங்களில் உள்ள தொற்று நிலவரத்திற்கு ஏற்ப தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சம் காரணமாக தளர்வுகள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இன்னும் சில தினங்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? உங்களுக்காக SSC யில் காத்திருக்கும் 25271 காலிப்பணியிடங்கள்
இதற்காக கேரள மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதாவது ஜூலை 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தளர்வுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஏ, பி, சி என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. மேற்கூறிய 3 நாட்களில் ஏ, பி, சி பிரிவுகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் தவிர, ஜவுளி கடைகள், காலணி கடைகள், மின்னணு கடைகள், ஆடம்பர மற்றும் நகைக் கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படும்.
தமிழகத்தில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
கேரளாவில் சோதனை நேர்மறை விகிதம் 10.4%, உயிரிழப்பு விகிதம் 0.48% ஆக உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 1.17 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி, 44.18 லட்சம் பேர் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டு உள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகளவு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரள முதலவர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.