இனி போதை, மது அருந்தி வாகனங்கள் ஓட்டினால் உரிமம் ரத்து – கேரள அரசின் அதிரடி உத்தரவு!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குடித்துவிட்டு வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கேரள அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
உரிமம் ரத்து
கேரள மாநிலத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் ஒன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் முதல்வர் கூறியதாவது, போதை பொருட்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றசாட்டுகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிய அவ்வப்போது ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் பணிகளில் ஈடுபடுபவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, பைக் ஸ்டண்டுகள் நடைபெறுவதை கண்டறியும் வகையில் தொழில்நுட்பம் மிகுந்த சைபர் ரோந்து சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை அனைத்து போக்குவரத்து துறையினருக்கும் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்.