நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றசாட்டுகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
நாடு முழுவதும் பெண்களுக்கான பாலியல் குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் பெண்ணை பார்த்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பிய வழக்கில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சட்டங்கள் கடுமையாக்குவது தான் குற்றங்களை தடுக்க ஒரே வழி என கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. என்ன தான் பெண்களை பாதுகாக்க பலர் குரல் கொடுத்தாலும், எங்கையாவது ஒரு இடத்தில் குற்றம் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில், பக்கத்து வீட்டார் தன்னை பார்த்து விசில் அடித்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
பல்கலைக்கழகங்களுக்கு பரந்த முக்கிய உத்தரவு – தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அதிரடி!
Follow our Instagram for more Latest Updates
அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அதில் ஒரு ஆண் பெண்ணை நோக்கி விசில் அடிப்பது என்பது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் யாரும் பாலியல் நோக்கத்துடன் அவரது உடலைத் தொட்டதாகக் கூறவில்லை. அதனால் இது குற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு ஐபிசியின் கீழ் தொடரப்பட்ட குற்றங்களுக்கு சிறை காவல் தேவையில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தும் போது, தலா ரூ.15,000 ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.