எழில் எழுதிய கடிதத்தால் நின்று போன தேவியின் திருமணம், வருத்தத்தில் கயல் – இன்றைய “கயல்” சீரியல் எபிசோட்!
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “கயல்” சீரியலில் இன்றைய எபிசோடில் பல திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கயல் சீரியல்:
தமிழகத்தில் நம்பர் ஒன் சீரியலாக சன் டிவி கயல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் மற்றும் ஹீரோயினாக நடிகை சைத்ரா ரெட்டி நடிக்கிறார். சாதாரண நடுத்தர வயது பெண் கயல் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற படும் கஷ்டங்களை பற்றி இந்த சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த சீரியலில் கயல் ஒரு நர்ஸ், அவர் தனது தங்கை தேவியின் திருமணத்தை நன்றாக நடத்த வேண்டும் என போராடி வருகிறார். ஆனால் தேவியின் மாமியார் உன் தங்கையின் திருமணம் நடைபெறாது என சவால் விட்டு செல்கிறார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் அர்ஜுன் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
தேவியின் திருமணத்திற்கு முக்கிய தடையாக அமைந்தது எழில் எழுதிய லவ் லெட்டர். ஆனால் அது பற்றி தெரியாத தேவி எழிலிடமே அது பற்றி பேச லவ் லெட்டரை என் பேக்கில் வைத்து விளையாடி விட்டான். உலகத்தில் உள்ள எந்த பொண்ணுக்குமே பிடிக்காது என்று சொல்கிறாள் கயல். இந்த லெட்டரை மாப்பிள்ளை வீட்டில் பார்த்து படித்து விட்டு உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்வதாக கயல் எழிலிடம் சொல்ல, சராசரி பொண்ணோட போராட்டம் ஆம்பிளைங்களுக்கு தெரிய மாட்டேங்குது… ஒரு பொண்ணை பார்த்த உடனே லெட்டர் எழுதி கொடுக்கணுமா? லவ் லெட்டருக்கு பின்னாடி என்ன பிரச்சினை வரும்னு தெரிய மாட்டேங்குது என கவலைபட்டு கயல்பேசுகிறார்.
எனக்கு காதல் மீது இருந்த மரியாதையை எல்லாமே போய்விட்டது. நடுத்தர பெண்களுக்கு திருமணம் என்பது, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றுக் கொள்வது போல என ஆவேசமாக பேச என்ன சொல்வது என தெரியாமல் எழில் இருக்கிறான். தன் தங்கையின் வாழ்க்கையை எடுத்த இந்த லெட்டர் யாரு எழுதியது என தெரியாமல் கயல் இருக்க அப்போது கோவிலுக்கு சாமி கும்பிட வந்த எழிலின் ரசிகர்கள் கையெழுத்து கேட்கிறார்கள். கயல் இந்த லெட்டரில் இருக்கும் கையெழுத்து எனக்கு மிகவும் தெரிந்தது தான் என சொல்ல, ரசிகர்களுக்கு கையெழுத்து போடாமல் இருக்கிறார் எழில்.
அதன் பின் தேவிக்கு பார்த்த மாப்பிள்ளை கயலை பார்க்க மருத்துவமனைக்கு வர லெட்டரை காரணமாக வைத்து என்னையும் தேவியையும் பிரித்து என்னோட மாமா பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று சொல்லி அழுகிறான் விக்னேஷ். நாங்க விஷம் குடித்து செத்துப் போகலாம் என முடிவு செய்துள்ளதாக விக்னேஷ் சொல்ல கயல் அதிர்ச்சி அடைகிறார். அப்படி எல்லாம் சாகக்கூடாது என சொல்ல, அப்போ ஓடி போய் திருமணம் செய்ய போகிறோம் என விக்னேஷ் சொல்கிறார். அவர்கள் பேசிக் கொண்டிருக்க இந்த கல்யாணம் ஒரு போதும் நடக்காது என்று மருத்துவமனை முழுவதும் கேட்கும் அளவிற்கு சத்தம் கேட்கிறது. அப்போது விக்னேஷ் அம்மா நிற்பதை பார்த்து கயல் அதிர்ச்சி அடைகிறார்.தேவியின் கல்யாணம் நடக்குமா? என வருத்தப்பட இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.