கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் – இன்று முதல் தொடக்கம்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் கேராளாவிற்கு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை தொடக்கம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உயிர் இழப்புகளும் , பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை ஆயுதமாக பயன்படுத்தினர். மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. அவசர தேவைகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
இந்திய அரசின் பத்ம விருதுகள் 2021 – விண்ணப்பிப்பது எப்படி?
அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் ஜிகா வைரஸ் அச்சம் மத்தியில் கர்நாடகா அரசு இன்று முதல் கேரளா மாநிலத்திற்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் செய்ய சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிக்கு நேரம் முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவர்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கேரளாவில் இருந்து தினமும் கர்நாடகா வருவோர் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.