தமிழ் இலக்கியம்
இங்கு காப்பிய இலக்கியத் தகவல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
காப்பிய இலக்கியத் தகவல்கள்
- காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்.
- காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.
ஐம்பெருங்காப்பியங்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை.
- சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
- மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
- வளையாபதி -பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி – நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
- சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்
- மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.
- குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி
- நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்)
1. சிலப்பதிகாரம்
நூற் குறிப்பு:
- சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்
- கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
- சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்,
- வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
- புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக் காண்டம் பதின்மூன்று
- காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது.
- இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
- முதற் காப்பியம், இரட்டைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.
- ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்
- ஆசிரியர் இளங்கோவடிகள்
- இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் குடவாயிற் கோட்டம் என்ற ஊர்.
- குடவாயிற் கோட்டம் சேர நாட்டு ஊர்
- மூன்று காண்டம் முப்பது காதை
- காதை – கதை பொதிந்துள்ள பாட்டு
- புகார் காண்டம்: மங்கல வாழ்த்துப் பாடல் முதல் நாடுகாண் காதை வரை உள்ள 10 காதைகள்
- மதுரைக் காண்டம்: காடுகாண் காதை முதல் கட்டுரைக் காதை வரை உள்ள 13 காதைகள்
- வஞ்சிக் காண்டம்: குன்றக் குரவை முதல் வரந்தருகாதை உள்ள 13 காதைகள்
- சிலப்பதிகாரம் ஆசிரியப் பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.
ஆசிரியர் குறிப்பு:
- இளங்கோவடிகள் சேர மரபினர்
- இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை
- இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்
- இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
- அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
- இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
சிலம்பின் புகழ்:
- “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு” – பாரதியார்
“சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் … தமிழ்ச்
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி
கொண்டிருந்தேன்” – பாரதியார் - “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப் போல் இளங்கோவனைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” – பாரதியார் - “தமிழ் கூறும் நல் உலகம்” என்று மூன்று நாடுகளையும் ஒருங்கே காணும் தன்மை தொல்காப்பியத்தில் உண்டு. ஆனால் சங்க இலக்கியத்தில் இல்லை.
“முதன்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள் – மு.வரதராசனார். - நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து முதலில் பாடியவர் இளங்கோவடிகள்
- நாட்டுப்புறப் பாடல்களுக்குச் சிறப்புத் தந்து இணங்கோவடிகளை அடுத்துப் பாடியவர் மாணிக்கவாசகர்;
- சைவ வைணவ நெறிகளையும் பாடிய சமணநூல் சிலப்பதிகாரம்
- முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம்
- முதல் தேசியக் காப்பியம் சிலப்பதிகாரம்
- இரண்டாவது தமிழ் தேசிய காப்பியம் பெரிய புராணம்
- பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
- சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
முக்கிய கதை மாந்தர்கள்:
- தலைவன் கோவலன்
- தலைவி கண்ணகி (சங்க காலத்துக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் மனைவி பெயரும் கண்ணகி)
- ஆடல் மங்கை மாதவி
- கோவலன் தந்தை மாசாத்துவான்
- கண்ணகியின் தந்தை மாநாய்கன்
- மாதவியின் தாய் சித்திராபதி
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை
கண்ணகியின் தோழி தேவந்தி (இவள் ஓர் அந்தணப் பெண் இவள் கணவன் பாசண்ட சாத்தன்) - மாதவியின் தோழி வயந்தமாலை
- பெண் சமணத்துறவி கவுந்தியடிகள்
- ஆண் பௌத்தத் துறவி அறவண அடிகள்
செய்திகள்:
- சிலம்பின் குறிக்கோள் மூன்று
- கோவலன் – மாதவி பிரிவுக்குக் காரணம் ஊழ்
- கோவலன் மதுரை சென்றதுக்குக் காரணம் ஊழ்
- கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்
- மதுரை எரிந்ததற்குக் காரணம் ஊழ் என்று இளங்கோவடிகள் கருதுகிறார்.
- இளங்கோவடிகளுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
- கண்ணகியின் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தனார் எழுத வேண்டும் என்று சொன்னவர் இளங்கோவடிகள்
- கண்ணகியின் வரலாற்றை எழுதத் தகுதியுடையவர் இளங்கோவடிகளே என்று சொல்லி அவரே எழுத வேண்டும் என்று சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.
- இளங்கோவடிகள் தம் நூலைச் சீத்தலைச் சாத்தனார் முன் அரங்கேற்றினார்.
2. மணிமேகலை
- ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்
- காலம் 2 ஆம் நூற்றாண்டு
- இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு
- பௌத்த காப்பியம்
- தமிழன் இரண்டாம் காப்பிய நூல்
- சமய பூசலுக்கு வித்திட்ட நூல்
- துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
- பெண்ணின் பெருமை பேசும் நூல் (சிலப்பதிகாரம் போன்று)
- சங்க இலக்கியம் இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தது திருக்குறள் இல்லறம் துறவறம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்தது மணிமேகலை துறவுக்கு முதன்மை கொடுத்தது.
நூல் அமைப்பு:
- காண்டப் பிரிவுகள் இல்லை
- 30 காதைகள் உள்ளன
- முதல் காதை விழாவறைக் காதை
- இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
- முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.
- 27-வது சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை மட்டும் இணைக் குறள்
- ஆசிரியப்பாவாலானது மற்றவை நிலை மண்டில ஆசிரியப்பாக்கள்
ஆசிரியர் குறிப்பு:
- மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
- இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
- கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
- இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
- இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
- இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
- தண்டமிழ் ஆசான் சாத்தன் தன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாராகப் பாராட்டியுள்ளார்.
- இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
நூற்குறிப்பு:
- மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் இந்நூலுக்கு மணிமேகலையைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
- இந்நூல் சொற்சுவையுமம் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. பௌத்த மதச் சார்புடையது.
- முப்பது காதைகளைக் கொண்டது
- முப்பது காதைகளுள் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை இருபத்து நான்காவது காதை.
கதை மாந்தர்:
- மணிமேகலையின் தோழி சுதமதி கண்ணகியின் தோழி தேவந்தி
- ஆதிரையின் கணவன் சாதுவன்
- மணிமேகலைக்கு முதன்முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் ஆதிரை
- ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவள் காய சண்டிகை
- விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் காய சண்டிகை
- காய சண்டிகையின் பசிநோயைப் போக்கியவள் மணிமேகலை
- மணிமேகலையை மணிபல்லவத்தீவுக்கு அழைத்துச் சென்ற தெய்வம் மணிமேகலாத் தெய்வம்
- மணிமேகலாத் தெய்வம் மணிமேகலைக்குக் கொடுத்த வரம் மூன்று
- ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்தது சிந்தாதேவி
- அமுதசுரபியைக் கோமுகியில் இட்டவன் ஆபுத்திரன்
- அமுத சுரபி பற்றி மணிமேகலைக்குச் சொன்னது தீவதிலகை
இடங்கள்:
- மணிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
- மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
- மணிமேகலை சமயவாதிகளிடம் உண்மை கேட்ட ஊர் வஞ்சி மாநகரம்
- பூம்புகாரில் உள்ள சோலைகள் : இலவந்திகை, உய்யாவனம், உவவனம், கவேரவனம், சம்பாதிவனம்
- மணிமேகலை பூக்கொய்யச் சென்ற வனம் உவவனம்
- மணிபல்லவத்தில் இருந்த பீடிகை புத்தபீடிகை
- அமுத சுரபி இருந்த இடம் கோமுகி
- அமுத சுரபிக்கு வேறு பெயர் அட்சய பாத்திரம்
செய்திகள்:
- சம்புத் தீவின் தெய்வம் சம்பு
- சம்புத் தீவிற்கு நாவலந்தீவு என்ற வேறுபெயரும் உண்டு
- நாவலந்தீவு என்பது இந்தியா
- சம்பாபதி புகார் நகரத்திற்குக் காவிரி பூம்பட்டினம் என்று பெயர் அளி;த்தது.
- முதன்முதலில் இந்திரவிழா எடுத்தவன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
- இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்.
- மழை வேண்டி எடுக்கப்படும் விழா இந்திரா விழா
- பூம்புகாரில் இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததாக சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டு நூல்களும் கூறுகின்றன.
- மூவகைப் பத்தினிப் பெண்டிர்
1. உடன் எரி மூழ்குவர்
2. தனிஎரி மூழ்குவர்
3. கைம்மை நோன்பு நோற்பார் - உடல் அடக்க முறை ஐந்து
1. சுடுதல்
2. வாளா இடுதல்
3. தோண்டிப்புதைத்தல்
4. பள்ளத்தில் அடைத்தல்
5. தாழியில் கவிழ்தல் - தீயவை பத்து
1. கொலை 2. களவு 3. காமம்
4. பொய் 5. குறளை 6. கடுமொழி
7. பயனில் சொல் 8. வெஃகல் 9. வெகுளல்
10. பொல்லாக்காட்சி
3. சீவக சிந்தாமணி
- ஆசிரியர் திருத்தக்க தேவர்
- காலம் 9 ஆம் நூற்றாண்டு. கருத்து வேறுபாடு உண்டு.
- திருத்தக்க தேவர் நிலையாமை குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்
- விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
- சமணக் காப்பியம்
- மணநூல், காமநூல்,முக்தி நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
- வட மொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி
- காண்டப் பிரிவு இல்லை
- 13 இலம்பகங்களையும் 3145 பாடல்களையும் கொண்டது.
- முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்
- இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்
- காப்பியத் தலைவன் சீவகன்
- சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
- சிந்தாமணி என்பது கேட்டதைக் கொடுக்கும்
- தேவலோகத்தில் உள்ள ஒரு மணி (ரத்தினம்)
- சீவகனின் தந்தையான சச்சந்தனைக் கொன்றவன் கட்டியங்காரன்
- சீவகன் பிறந்த இடம் சுடுகாடு
- சீவகனை எடுத்து வளர்த்தவன் கந்துக்கடன் என்னும் வணிகன்
- சீவகனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் அச்சணந்தி
- திருத்தக்கதேவர் சோழர்குலத்தில் பிறந்தவர் இவர்.
- இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
- இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம் ஆகும்.
நூல் குறிப்பு:
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி
- இந்நூலின் கதைத் தலைவன் சீவகன்
- அவன் பெயரை இணைதத்துச் சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றது என்பர்.
- இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.
சிறப்பு:
- அனைத்துச் சமயத்தவரும் விரும்பிக்கற்ற சமணக் காப்பியம்
- சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிக்கற்ற காப்பியம்
- நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.
- இவர் இருமுறை உரை எழுதினார் என்பர்
- சைவரான உ.வே.சா. அவர்கள் முதன் முதலில் பதிப்பித்தார்.
- அவர் பதிப்பித்த முதல் நாலும் சீவகசிந்தாமணியே ஆகும்.
- கிறித்துவரான ஜி.யு.போப் இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.
4. வளையாபதி
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சமணக் காப்பியம்
- விருத்தப்பாவால் ஆனது
- முழுமையாகக் கிடைக்கவில்லை
- கிடைத்தவை 72 பாக்கள்
- மூல நூல் வைசிக புராணம் 35 வது சுருக்கம்
- நவகோடி நாராயணன் பற்றிய நூல்
- மடலேறுதல் பற்றிக் கூறும் காப்பிய நூல்
- ஒட்டக் கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கயாகப்
- பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.சிறப்பு
- இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்
5. குண்டலகேசி
- ஆசிரியர் நாதகுத்தனார்
- காலம் 7 ஆம் நூற்றாண்டு
- பௌத்த காப்பியம்
- சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்
- குண்டலகேசி விருத்தம் அகல கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
- நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
- கிடைத்தவை 224 பாடல்கள்
- குண்டல கேசியின் வரலாற்றை நீலகேசி கூறுகிறது
- குண்டல கேசியின் இயற்பெயர் பத்திரை
- இராசகிருக நாட்டு மந்திரியின் மகள்
- குண்டலகேசியின் கணவன் காளன் இவன் ஒரு கள்வன்
- குண்டலகேசி சாரிபுத்தரிடம் தோற்றுப் புத்தமதம் தழுவினாள்
- கலைஞரால் ‘மந்திரி குமாரி’ என்று திரைப்படமாக்கப்பட்டது.
5(அ). ஐஞ்சிறு காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களே
- அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது
- சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.
- ஐஞ்சிறு காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் ச.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.
- நாக குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
- உதயண குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)
- யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள் நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை
- சமண சமயத்துப் பெண் துறவியின் பொதுப்பெயர் கந்தியார்
1. நாககுமார காவியம்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தயார் ஒருவர் எழுதினார் என்பர்.
- நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்
- இந்நூலுக்கு நாகபஞ்சமி கதை என்ற வேறுபெயரும் உண்டு
- இராசகிரியில் உள்ள விபுலி மலையில் வீற்றிருக்கும் வர்த்தமான மகாவீரரை வணங்குவதற்குச் சிரேணிக மாமன்னனும் அவன் தேவியாகிய சாலினியும் சென்றனர். அக்கோயிலில் இருந்த தவ முனிவராகிய கௌதமர் அவர்களுக்கு நாககுமாரனது கதையை எடுத்துரைக்கிறார்.
- மணத்தையும் போகத்தையும் மிகுதியகாகக் கூறும் சமண நூல்
2. உதயணகுமார காவியம்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தியார் என்பர்.
- மூலநூல் பெருங்கதை
- காண்டங்கள் 6,விருத்தப்பாக்கள் 369
1. உஞ்சைக் காண்டம் 2. இலாவண காண்டம்
3. மகதகாண்டகம் 4. வத்தவ காண்டம்
5. நரவாகன காண்டம் 6. துறவுக் காண்டம் - பெருங்கதையின் முதற்பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. முழுக் கதையையும் அறிய இந்நூல் துணைபுரிகிறது.
- உதயணன் குலம் குருகுலம்
- பெற்றோர் சதானிகன்ää மிருகாபதி
- நாடு வத்தவ நாடு
- தலை நகரம் கோசாம்பி
- சூரிய உதயத்தில் பிறந்ததால் உதயணன் எனப்பட்டான்.
- உதயணனுக்கு ‘விச்சை வீரன்’ என்ற வேறு பெயரும் உண்டு
- விச்சை வீரன் என்றால் பலகலை வல்லவன் என்று பொருள்
- உதயணனைச் சிறைப்படுத்தியவன் உச்சியினி மன்னன் பிரச் சோதனன்
- உதயணன் யாழின் பெயர் கோடபதி
- இவன் அமைச்சன் பெயர் யூகி (நண்பனும் ஆவான்)
- உதயணனுக்கு நான்கு மனைவியர்
3. யசோதர காவியம்
- ஆசிரியர் வெண்ணாவலூர் உடையார்வேள்
- சருக்கம் 5, பாடல்கள் 320
- வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தர் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
- உயிர்க்கொலை தீது என்று உணர்த்தும் நூல்
- நல்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் இம்மூன்றும் மும்மணிகள்
- ஏழுவகை நரகங்கள் கூறப்படுகின்றன அவை.
1. இருளில் இருள் 2. இருள்
3. புகை 4. சேறு 5. மணல்
6. பரல் 7. மருள்
4. நீலகேசி
- நீலகேசி என்றால் கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சருக்கம் 10 (பதிகவுரைச் சருக்கம் நீங்கலாக)
- பாடல்கள் 894
- நீலகேசித் தெருட்டு என்ற வேறு பெயரும் உண்டு
- சமண முனிவர் முனிச் சந்திரனை நீலி என்ற பெண் அச்சுறுத்தி மயக்க முயல்கிறாள். மயங்காத முனிவர் அறிவுரை கூற, அவள் திருந்தி சமணமதத்தை ஏற்றுப் பிற சமய வாதிகளை வெற்றி கொள்கிறாள்.
- சமணம் அல்லாத பிற இந்திய சமயங்கின் கோட்பாடுகளைத் தருக்க முறையில் மறுத்துரைக்கும் நூல்
- குண்டலகேசி என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் நீலகேசி
உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர். இவ்வுரைக்குச் சமய திவாகர விருத்தி என்ற பெயரும் உண்டு
5. சூளாமணி
- ஆசிரியர் தோலா மொழித்தேவர். இயற்பெயர் வர்த்தமான தேவர்
- சருக்கம் 12 விருத்தப்பாக்கள் 2330
- காப்பியத் தலைவன் உலகின் முடிக்கோர் சூளாமணி ஆயினான் என்பதால்
- சூளாமணி என்று பெயர் பெற்றது. (பலமுறை வருதல்)
- முதல் நூல் வட மொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
- இதன் கதை ஸ்ரீ புராணத்திலும் உள்ளது.
- சுரமை நாட்டு மன்னன் பயாபதி
- பயாபதியின் மக்கள் மூவர்.
1. திவிட்ட நம்பி (கண்ணன் அவதாரம்)
2. விசய நம்பி (பலராமன் அவதாரம்)
3. மகள் சோதிமாலை
பெருங்காதை
- ஆசிரியர் கொங்குவேள்
- உதயணன் வரலாற்றை முதலில் தமிழில் கூறிய நூல்
- சமணக் காப்பியம்
- இதற்குக் ‘கொங்குவேள் மாக்கதை” என்ற பெயரும் உண்டு
- நூல் முழுவதும் கிடைக்கவில்லை
கிடைத்தவை 5 காண்டங்கள், 99 காதைகள் ஆசிரியப்பாவில் ஆனது - முதற் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. (பதிற்றுப்பத்துப் போல)
- முழுக் கதையையும் அறிய உதயணகுமார காவியம் உதவி செய்கிறது.
- கதைக் களஞ்சியம் என்று போற்றப்படும் நூல் பெருங்கதைபிருகத்கதா என்ற பைசாச மொழிநூலை ஒட்டி இயற்றப்பட்டது என்றும் கூறுவர்.
விவேக சிந்தாமணி
நூல் குறிப்பு : விவேக சிந்தாமணி என்னும் இந்நூல் புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
வாழ்த்து – தாயுமானவர்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – தாயுமானவர்
- பெற்றோர் – கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
- ஊர் – நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
- மனைவி – மட்டுவார் குழலி
- நூல் – தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
- பணி – திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
- காலம் – கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
- வாழ்த்தாக இடம் பெற்றுள்ள பாடல், தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
- இந்நூல் தெய்வத் தமிழின் இனிமையும்; எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் மனத்தூய்மை, பக்திச்சுவை ஆகியவற்றை ஊட்டும்.
- திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவர் திருவருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
- தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.
காப்பிய இலக்கியத் தகவல்கள் PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download