கண்ணான கண்ணே சீரியலின் அடுத்த வாரம் நடைபெற உள்ள காட்சிகளுக்கான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மீரா பிறந்த வீட்டில் இருப்பாரா? இல்லை புகுந்த வீட்டிற்கு செல்வாரா? என புதிரான கேள்விக்கு தனது அப்பா எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறாள்.
கண்ணான கண்ணே சீரியல்:
அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மீராவை காதலித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்கிறார் யுவா. மீராவின் கல்யாணத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு எதிர்மறையாக வாழ்கின்றனர். திருமணத்தன்று மீராவை விளக்கு ஏற்ற விடாமல் யுவாவின் அப்பா தடுக்கிறார். பேச்சுவார்த்தை அதிகமாகி அவர் தனது அத்தையை அடிக்கிறார். இதனால் கோபம் அடையும் யுவாவின் அப்பா அவரை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.
ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி – சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!
அதன் பின் யுவா வீட்டோடு மாப்பிள்ளை ஆகிறார். மேலும் மீராவால் கௌதமும் யமுனாவும் அடிக்கடி சண்டையிட்டு, ஒரே வீட்டில் இருந்தாலும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையில் யுவாவின் அப்பாவும், அத்தையும் இருவரையும் பிரிக்க பல்வேறு முயற்சி செய்கின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் காதலால் அவர்களை பிரிக்க முடியவில்லை.
தனது காதலை சரஸ்வதியிடம் சொல்லும் தமிழ், அதை ஏற்க மறுக்கும் சரஸ்வதி – இந்த வார ப்ரோமோ!
அடுத்த வாரம் நிகழும் எபிசோடுகளுக்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு ட்விஸ்ட்கள் நடக்க உள்ளதாக தெரிய வருகிறது. அதாவது மீரா எப்படியாவது தனது அப்பாவின் அன்பை அடைவாரர் என எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் வீட்டில் உள்ள யாரும் எதிர்பாராத திருப்பமாக யுவா வீட்டில் உள்ளவர்கள் மீராவை அவர்களது மருமகளாக ஏற்றுக் கொண்டு உள்ளனர். மேலும் அவரை தனது வீட்டிற்கு அழைத்து விளக்கு ஏற்ற சொல்கின்றனர். இந்த விசயத்தை கேட்ட அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் மீராவோ பெரும் சந்தேகத்தில் உள்ளார். ஏன் திடீர் என யுவா வீட்டில் இந்த முடிவு எடுத்து உள்ளனர் என குழம்பி உள்ளார்.