மதுரை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 23 மின்தடை!
மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 23) சமயநல்லூர் மற்றும் திருப்பாலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின்சார வாரியம் வரும் 10 நாட்களுக்கு பாரம்பரிப்பு பணிகளின் காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று தெரிவித்து இருந்தது. அந்த வகையில் தற்போது நாளை (ஜூன் 23) புதன்கிழமை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மற்றும் திருப்பாலை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் பகுதியில் இருந்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடைபெறும் இடங்களான நகரி சாலை, அய்யன்கோட்டை சந்திப்பு, டி.வி. நல்லூர், தேனூர், தாதம்பட்டி, கள்ளர் மடம், வல்லபகணபதி நகர், மஹாராணி நகர், ஆர்.வி. நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல் திருப்பாலை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கோமதி அம்மன் நகர், முத்தமிழ் நகர், அதிசயா நகர், பார்க் டவுன், தபால் தந்தி நகர், கலை நகர், பழைய நத்தம் நகர், பாமா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.