விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம் – துணைவரின் விருப்பம் முக்கியம்!

0
விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம் - துணைவரின் விருப்பம் முக்கியம்!
விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம் – துணைவரின் விருப்பம் முக்கியம்!

திருமணம் நடந்து முடிந்த தம்பதிகளுக்கு மத்தியில் பாலியல் முரண்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து வழக்கு:

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பெண்ணின் மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது அந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கின்படி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்ற தம்பதிகளில் 17 நாட்களிலேயே கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார். மனைவி நவம்பர் 29ஆம் தேதி வரை தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 17 நாட்கள் திருமண வாழ்வின் போது அந்தப் பெண் தனது விருப்பத்திற்கு மாறாக கணவரின் மூலம் பாலியல் தவறான நடத்தை சகித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வழக்கில் சம்பந்தப்பட்ட கணவர் குற்றச்சாட்டுகளை மறுத்து மீண்டும் தனது மனைவியுடன் இணைவதற்கு முயற்சிகளை செய்தார். கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரணை செய்து மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டு புனையப்பட்டதாக உள்ளது. கணவரின் பாலியல் முறைகேடு விவாகரத்துக்கான நியாயமான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தில் மனைவியின் சம்மதம் மற்றும் கண்ணியம் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதால், மனுதாரருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!