அஞ்சல் துறையில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.81000 சம்பளம்!
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது முதல் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அஞ்சல் துறையில் காலியாக பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு வேலை:
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது முதல் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அஞ்சல் துறையில் காலியாக பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அஞ்சல் உதவியாளர், தபால்காரர் மற்றும் பல் பணியாளர் உள்ளிட்ட பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
- பணி இடம்: பீகார் வட்டம்
- பணி: தபால் உதவியாளர்
- காலியிடங்கள்: 31
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம்: 25,500 – 81,100
- வயது வரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்
பணி: வரிசையாக்க உதவியாளர்
- காலியிடங்கள்: 11
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம்: 25,500 – 81,100
- வயது வரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்
பணி: தபால்காரர்
- காலியிடங்கள்: 05
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி அறிந்திருக்க வேண்டும்.
- சம்பளம்: 21,700 – 69,100
- வயது வரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்
பணி: பல் பணியாளர்
- காலியிடங்கள்: 13
- கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி அறிந்திருக்க வேண்டும்.
- சம்பளம்: 18,000 – 56,000
- வயது வரம்பு: 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்
- விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று அதில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- அனுப்பவேண்டிய முகவரி: Assistant Director (Recruitment) 5th Floor O/O Chief Postmaster General Bihar Circle, Patna-800001
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2022
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்