இந்தியாவில் 7 இடங்களில் மெகா ஜவுளி ஆடை மண்டலம் – 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்!
இந்தியாவில் 7 இடங்களில் மெகா ஜவுளி மற்றும் ஆடை மண்டலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதன் வாயிலாக 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தடுக்கும் பொருட்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியிலும் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டது. முதல் கட்டமாக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்தனர். அரசாங்கத்தை தொடர்ந்து தனியார் துறைகளும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஆர்வம் காட்டி வந்தது. அந்த வகையில் ஆங்காங்கே மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படித்த இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பணிகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை கிடைக்கும் – இந்த திட்டம் பற்றி தெரியாம இருக்காதீங்க!
தொடர்ந்து அரசாங்கம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மற்றும் ஆடை மண்டலத்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 7 இடங்களில் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி ஆடை மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.