Tech Mahindra நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – CEO தகவல்!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான (IT) நிறுவனமான டெக் மஹிந்திரா, இந்த நிதியாண்டில் மட்டும் மூன்று மடங்கு புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tech Mahindra வேலைவாய்ப்புகள்:
இந்த நிதியாண்டு துவங்கியதில் இருந்து இந்தியாவை சேர்ந்த பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய வேலை வாய்ப்புக்கான முக்கிய அறிவிப்பை டெக் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சிபி குர்னானி கூறுகையில், வழக்கத்தை விட தற்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ள புதிய ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 40,134 பேருக்கு கொரோனா உறுதி – 422 பேர் உயிரிழப்பு!
அதாவது ‘டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த காலாண்டில் மட்டும் 5,200 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது, இதன் மூலம் அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1.26 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டில் மீதமுள்ள நிதியாண்டிலும் புதிய பணியாளர்களை அமர்த்துவது விரைவான வேகத்தில் நடைபெறும்’ என்று கூறியுள்ளார். மேலும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மிகப்பெரிய நோக்கம், திறமையை வளர்ப்பதும் அதன் மூலம் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க, செயற்கை நுண்ணறிவு, இணையம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் புதியவர்களை பெற விரும்புவதாகவும் குர்னானி தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதனிடையே டெக் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 39.2% உயர்ந்து, அதன் வருவாயை 1,353 கோடியாக பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இதற்கு முந்தைய வருடத்தில் 972.3 கோடி நிகர லாபத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த காலாண்டில் மட்டும் மொத்த வருமானம் ஒரு மாதத்தில் 7% முன்னேறி, 10,485 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் மீதமுள்ள நிதியாண்டில் அதன் வளர்ச்சியைத் தக்கவைக்கும் அல்லது அதையும் தாண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.