Wipro நிறுவனத்தில் பெண்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!
ஐடி நிறுவனமான விப்ரோ பல்வேறு காரணங்கள் காரணமாக பணியில் இடைவெளியில் இருந்த பெண்களுக்காக ‘மீண்டும் தொடங்கு’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றிய அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான திட்டம்:
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்குனர்களில் ஒன்றான விப்ரோ, இப்போது ‘மீண்டும் தொடங்கு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம், ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பல்வேறு காரணங்கள் காரணமாக தங்களது தொழிலில் இருந்து இடைநின்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. தங்களது பணியில் இடையில் நிறுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியாக இந்த திட்டம் உள்ளது.
தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!
சமீபத்தில் HCL நிறுவனம் இந்த ஆண்டு 60% பெண்களை கேம்பஸ் பிளேஸ்மென்ட் மூலம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இந்த நிறுவனம் இந்த ஆண்டு நுழைவு நிலை பணிகளுக்காக 22,000 புதிய நபர்களை நியமிக்கத் தயாராகி வருகிறது. விப்ரோ மற்றும் இன்போசிஸ் புதிய வேலைவாய்ப்புகளில் சுமார் 50% பெண்களை நியமிக்க உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த பணியாளர்களில் 45% பெண் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் கிட்டத்தட்ட 35,000 கல்லூரி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த இலக்கு வைத்துள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
விப்ரோவின் ‘மீண்டும் தொடங்கு’ திட்டத்தில் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ள வேண்டும். பெண் ஐடி தொழில் நிபுணர்கள் தங்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த முயற்சியானது திறமையான பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்து அவர்களின் திறனைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில தெரிந்தர்களுக்கு மட்டும் தான் முன்னுரை யா இல்லை தமிழுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறதா
Use full jobs
Thanks
I am very interested