தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!

0
தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!
தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!
தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 7வது மாவட்ட மாநாடு கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள்:

அவிநாசியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 14வது வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 7வது மாவட்ட மாநாடு நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில தலைவர் அன்பரசு சிறப்புரையாற்றினார். கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அரசு பணிக்கான காலியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை.

தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கான தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் அமையவில்லை. பொதுமக்கள் அதிகமாக கூடுவது மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடுப்பூசி பணிகள் தீவிரமாக்கப்பட்டது. இதனால் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு ஊழியர் சங்கத்தின், 7வது மாவட்ட மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி – குரூப் 1, 2 & 4 VAO குறித்த முக்கிய அறிவிப்பு! அக்.27 இல் ஆலோசனை!

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், கணினி இயக்குநர், கல்வித்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் டி.பி.சி., ஊழியர்கள், பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மேலும் அரசு துறையில் காலியாக உள்ள 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!