தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளை தொடர்ந்து வடுவூர், கோவில்வெண்ணியில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை:

கொரோனா காலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து புகார்கள் குவிந்து வந்ததால் தமிழகம் முழுவதும் வரும் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத் துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் விளக்கம்!

இதற்காக முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும் மின்தடை செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை வடுவூர், கோவில்வெண்ணி யில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதிகாரபூர்வமாக வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி – குரூப் 1, 2 & 4 VAO குறித்த முக்கிய அறிவிப்பு! அக்.27 இல் ஆலோசனை!

வடுவூா் பிரிவுக்கு உள்பட்ட வடுவூா், மூவா்கோட்டை, எடமேலையூா், எடகீழையூா், சாத்தனூா், நெய்வாசல் ஆகிய பகுதிகளிலும், கோவில்வெண்ணி பிரிவுக்கு உள்பட்ட கோவில்வெண்ணி, நகா், காளாச்சேரி, முன்னவால்கோட்டை, மேலபூவனூா், நத்தம், அதனூா், சோனாப்பேட்டை, செட்டிச்சத்திரம், சிக்கப்பட்டு, அம்மாப்பேட்டை, கருப்பு முதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவலியாநல்லூா் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!