TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி – குரூப் 1, 2 & 4 VAO குறித்த முக்கிய அறிவிப்பு! அக்.27 இல் ஆலோசனை!
தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அரசு தேர்வாணையம் வரும் அக்.27ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி தெரிவு செய்து வருகிறது. அதன் அடிப்படியில் கடந்த 2019ம் ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஏனெனில் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டும் அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. அதனால் இந்த தேர்வை எதிர்பார்த்து அதிக அளவிலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் விளக்கம்!
ஏனெனில் இந்த தேர்வானது பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை எழுதும் அளவிற்கு பல்வேறு துறைகளுக்கான கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி கால அட்டவணையின் படி மீதமுள்ள தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO ஆகிய தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
மேலும் இந்த தேர்வுகள் எந்த தேதியில் நடத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் வரும் அக்.27ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை அறிந்து தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.