ஜூலை 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
விசாகபட்டினம் கஞ்சாரபாலத்தில் ஜூலை 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த முகாமின் வாயிலாக சுமார் 221 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில் அனலிஸ் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பங்கேற்கவுள்ளது. இந்நிறுவன பணியிடத்திற்கு B.SC., M.SC., கல்வித்தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வசந்தா கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆபரேட்டர் பதவியில் 4 காலியிடங்கள் உள்ளது. இப்பணிக்கு 30 வயத்திற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் ஹை-க்ரோ கெமிக்கல் பார்மா டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கலியாகவுள்ள வெல்டர்கள், ஆபரேட்டர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியே போதுமானது. இதே போல பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேறக்கவுள்ளனர்.