பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு 3 லட்ச ரூபாய் வரை பரிசு – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அட்டகாசமான பரிசுகளை வழங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு மதிப்பெண்கள்
ஜார்கண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 17ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது மாணவர்களின் உயர்கல்வியை தொடர்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது
மேலும் இந்த அறிவிப்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 3 லட்சம் ரொக்கப்பரிசு தொகை, மடிக்கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், 2ம் இடம் பிடிப்பவர்களுக்கு 2 லட்சமும், அத்துடன் 3ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அதிக மதிப்பெண் எடுத்த மற்ற மாணவர்களுக்கும் மடிக்கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்காக 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download