சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது. அதாவது, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.120 சரிவடைந்து ரூ.37,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.120 சரிவடைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தபடியே இருக்கிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்தே தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் தாய்மார்கள் தன் குடும்பத்தின் பாதி வருமானத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதாவது, எதிர்காலத்திலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரத் தான் போகிறது. இதனால், தற்போதே எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்துக்கொள்ளலாம் என தாய்மார்கள் எண்ணுகின்றனர்.
ஆரம்பத்தில் வங்கிகளில் பணம் சேமித்துவந்த தாய்மார்கள் தற்போது தங்கத்தில் பணத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வங்கிகளை காட்டிலும் இது தான் லாபகரமான திட்டமாக எண்ணுகின்றனர். அந்த வகையில் சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44 குறைந்து ரூ.4,710 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட் – விரைவில் 12வது தவணை பணம்!
நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து 37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.4,695க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.58 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிரடியாய் ரூ.120 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்